அறுவடை
;;; மப்பும் மந்தாரமுமான வானம். காகங்கள் ஒன்றிரண்டாக அங்கொன்று இங்கொன்றாக நின்று கரைந்து கொண்டிருந்தன. அவற்றின் கோரஸ் ஒலி ஆத்திரமூட்டுவதாக இருந்தது. வழமையில் வந்து போகும் எந்த ஒரு சின்னக் குருவியினங்களையூம் அன்று கண்டுகொள்ளவே முடியவில்லை. வழமையில் வீட்டு மாமரத்தில் குந்தியிருந்து இனிய கீதமிசைக்கும் மாம்பழத்தியையோ காவி நிற உடலும் செம் மஞ்சள் நிற வாலும் கடுங் கருப்புத் தலையூம் கொண்ட வால் குருவியைத் தானும் அன்று காண முடியவில்லை. மரங்கள் வேறு ~கம் மென்று ஒரு ஆட்டம் அசைவூ இன்றி பிளாத்திக்கு மரங்கள் போல ... முழுச் சுழலுமே ஏதோ பயங்கரத்தை உணர்த்திவிடுவதான பிரமை.
வெறிச்சோடிக் கிடந்த வானத்தில் செழுமை முழுமையாக துhக்கி விடப்பட்டிருந்தது.
ஜெமீல் மாஸ்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதிகாலையில் சுபுஹு தொழுதுவிட்டு பள்ளியிலிருந்து வெளிப்பட்டால் கலந்தர் காக்காவின் கடையில் லெவரியாவூம் வண்டுவப்பையூம் தின்று ஒரு டீ யூம் குடித்துவிட்டு கடற்கரையோரமாக ஒரு துhரம் காலார நடந்து விட்டு வருவது அவரது வழக்கம்.
~~இன்டைக்கு வானம் இவ்ளோ மப்பா இருக்கே மாஸ்டர்... காதர் காக்கா அலுத்துக் கொண்டார்.
~~மெய்தான் காதர் காக்கா... காலமே கிளம்பி வார குளிர்த்தி இன்டைக்கு மனதுக்கு பிடிக்கல்ல... ஜெமீல் மாஸ்டரின் மனநிலையூம் மந்தமாகத்தான் இருந்தது.
நாற்பது வருட கால ஆசிரிய சேவையில் இருந்துவிட்டு ஓய்வூ பெற்றவர் ஜெமீல் மாஸ்டர். கடைசிக் காலநேரம் பள்ளியூம் தொழுகையூம் எழுத்தும் வாசிப்புமாக கரைகின்றது.
~ஸேர் என்று அவருக்கு வழி விட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் அவருக்கான தனியான மரியாதையை மனதிலிருத்திக் கொண்டவர்கள் தான்.
அன்று கடற்கரை மீது நாட்டம் கொள்ளாத ஜெமீல் மாஸ்டர் நேரே வீட்டை அடைந்து சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொண்டார்.
சற்றே கண்ணயரும் வேளையில் தான் அந்தக் கூக்குரல் அவரை உசுப்பி விட்டது.
~~கடல் வருது கடல் வருது... ஓடுங்கொ... ஓடுங்கொ...
அவருக்கு அது புதுவித ஓலமாகப் பட்டது. அறுபத்திரண்டு அகவைகளை எட்டிவிட்ட அவரால் இதுவரை கேட்டிராத ஒன்று... நின்று நிதானித்து தீர்மானம் எடுக்கக் கூடிய நேரம் அல்ல அது... உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஓடுவதைக் கண்டார்.
மனைவிஇ மக்கள் எல்லோரையூம் கூட்டிக் கொண்டு மேட்டுப் பக்கமாக ஓடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை.
முழு ஊரிலுமே எஞ்சியோர் அங்கு திரண்டிருந்தனர். பேயறைந்தவர்கள் போல் ஒவ்வொருவரும் பயத்தாலும் துக்கத்தாலும் மிரண்டு வெளுத்தப் போயிருந்தனர்...
அவர்கள் கண்முன்னே கடலின் ஆகோரக் காட்சி விரிந்தது. பின்தங்கிவிட்ட ஒவ்வொரு உயிரையூம் பந்தாடியது. உதவிக்கரம் நீட்ட முடியாத இக்கட்டில் ஒவ்வொருவரும் பரிதவித்தனர். தாயின் கையிலிருந்து உருவி எடுக்கப்பட்ட பிள்ளைகளின் கீச்சிடல் மனதைப் பிழிந்தது. ஒவ்வொருவரையூம் பறிகொடுத்த உள்ளங்கள் அழுது புரண்டன.
வீடு சொத்து செல்வம் எல்லாமே கடலுடன் கரைந்தது.
ஜெமீல் மாஸ்டரின் முத்த மகள் ஒரு ஆசிரியை. ஊரிலேயே மாப்பிள்ளையெடுத்து மாஸ்டரின் வளவிலேயே வீட்டை அமைத்துக் கொடுத்திருந்தார். இரண்டாவது மகளுக்கு இப்போதுதான் ஒரு வீட்டை அமைத்து முடித்து வரன் பாரத்துக் கொண்டிருந்தார். மற்றப் பெண்பிள்ளைகள் இருவரும் இரட்டையர். உயர்தரத்தில் கற்று வைத்தியராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாளெண்ணிக் கொண்டிருப்பவர்கள். இளையவன் மகன்.
ஜெமீல் மாஸ்டரது மட்டுமல்ல அனைவரதும் எதிர்பார்ப்புக்களை கரையச் செய்து சுனாமி என்ற பெயரில் அந்தக் கடற்கோள் அனாதரவாக்கி விட்டது.
வெறும் மணல்மேட்டில் கும்பல் கும்பலாக மக்கள் நிறைந்திருந்தனர். அநாதரவாக... நாதியற்று...
அன்றைய பொழுது விடிந்திருக்கவே கூடாது என்று எல்லோரும் போல் கூறிக் கொள்ளத்தான் செய்தனர். என்றாலும் முடங்கியிருந்துவிட முடியூமா...?
~அல்லாட நாட்டம் என்ற தோரணையில் ஜெமீல் மாஸ்டர் சுனாமிக்குள் அகப்பட்டுப் போன சனங்களை மீட்டெடுக்க ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். இந்தக் கஷ்டத்திலிருந்து மக்களை மீட்டெடுத்து உளரீதியாக கட்டியெழுப்பும் பணியில் மும்முரமாகிவிட்டார். எல்லாப் பக்கமிருந்தும் உதவிக்காக குழுகுழுவாக இளைஞர்கள் வந்திறங்குகின்றனர்.
~ஸேர்...
மாஸ்டர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு நிதானம் தட்டவில்லை. வளர்ந்த உடம்பு... கன்னத்தை அடைத்த தாடி... யாராக இருக்கும் என்ற தோரணையில் சிந்தனைய+டே நோக்கினார்...
சிரித்துக் கொண்டே ~~நீங்க... நீங்க... யார் மகன்...
~~நான் ஸேர்... பதுளையிலிருந்து வாரன்...
~~ஓ.. அப்படியா... மாஸ்டருக்கு தான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரிய நியமனம் பெற்று முதன் முதலாக காலடிவைத்த பாடசாலைதான் நினைவூ வந்தது. பத்து வருடங்கள் அங்கேயே சேவைசெய்தார்... இடையே சில தேவைகளின் நிமித்தம் பதுளைக்குச் சென்று வந்திருந்தாலும் இந்த உருவத்தை அவர் பார்த்திருக்கவில்லை.
~~ஸேர் ... நான் றமீஸ்... மாஸ்டரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இருக்காதா பின்னே... அன்று பத்து வயதில் சந்தித்தவன் இன்;று நாற்பது வயதில் தடாலடி வளர்ந்திருந்தான்.
கிறுக்கன்... சண்டியன் எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன். பாடசாலையில் என்றுமே அடிதடி... உதை குத்துதான்...
ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் அடி வாங்காத நாட்களேயில்லை. எல்லாச் சிக்கலிலும் அவனது பெயர் முடிச்சுப் போடப்பட்டு விகாரப்படுத்தப்பட்டு தண்டனையையூம் பெற்றுக் கொடுத்துவிடும்.
ஜெமீல் மாஸ்டர் அவனின் கூரிய கண்களை அவதானித்திருந்தார். அவனுள் புதைந்துபோன ஏக்கத்தை அவர் காணத் துடித்தார். அவனை நெருங்க நெருங்க அவன் விலகியே சென்றான். தன்னை அடிக்க துhற்ற இன்னுமொருவர் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்பதே அவனது எண்ணமாக இருந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மாஸ்டர் அவனில் கரிசனை காட்டுவதை படிப்படியாக வெளிப்படுத்தும் போது... அவனது கைகளில் பொறுப்புக்கள் விடப்படும் போது... ஜெமீல் மாஸ்டர் அவனது நெருங்கிய வழிகாட்டியாகி விட்டடிருந்தார்.
~~ஸேர் அன்டைக்கு இருந்த நிலையில தொடர்ந்திருந்திருந்தா நான் இன்டைக்கு பெரிய சண்டியனாகி இருந்திருப்பன்.. பெரிய ஸேர் ... ஸ்கூலால என்னய வெலக்கப் பார்த்த நேரம் வெலக்கியிருந்தா இன்டக்கு கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பன்...
மாஸ்டர் பிரின்ஸிபலிடம் கெஞ்சிக் கூத்தாடியது அன்றும் அவரது நினைவில் இருக்கத்தான் செய்தது.
~~நீங்க புதிசு மாஸ்டர்... இவங்களப் போலாக்கள திருத்தேலா... ஒரே வழி வெலக்கியூடுறதுதான்...
~~எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்க ஸேர்... என்னாலேண்டிய முயற்சிய நான் செய்றன்... அவன்ட உள்ளத்த அல்லா மாத்துவான்... அவன மட்டுமல்ல அவன்ட பெயருல அவன மாட்டி உடுறத்துக்காக இன்னம் செல புள்ளகள் செய்ற வேலகளேம் நான் கண்டு பிடிச்சிருக்கன் ஸேர்...
~~இதென்ன... புதுக்கத...
~~அதுதான் உண்ம ஸேர்... வேறு வழியின்றித்தான் அன்று அதிபர் அவனை விலக்காமல் ஜெமீல் ஸேரின் தலையில் கட்டினார்.
~~புதுத் தும்புக்கட்டு கொஞ்ச நாளக்கு நல்லாத் துhக்கும்தான்... கள்ளு முள்ளுகள்ல குத்திப்படச் செல்லக்கித்தான் நோவூ வெளங்கும்... சில ஆசிரியர்கள் அறிவூரையாகவூம் இன்னும் சிலர் குத்து வார்த்தை யாகவூம் இப்படிச் சொல்லத்தான் செய்தனர்.
ஆரம்பத்தில் மாஸ்டரைக் கூட றமீஸ் துச்சமாக மதித்துச் செயற்பட்ட போது இவனை அதிபர் உட்பட பலர் ஏளனப் பார்வை பார்த்தனர் தான். ஆனாலும்....
ஜெமீல் மாஸ்டரின் நம்பிக்கை வீண் பேகாவில்லை.
~~ஸேர் றமீஸட மேல்ல குத்தத்தப் பொட்டுட்டு எல்லா ஜராவ வேலகளயூம் செய்த எங்களயூம் பிரின்ஸிபல்ட்ட காட்டிக் குடுக்காம திருத்திட்டீங்க ஸேர்... றமீஸோடு கூட வந்திருந்தவர்கள் காலிதும் ஸாலிஹும் தான் என்றதை இப்போதுதான் மாஸ்டர் உணர்ந்தார்.
அவர் அங்கிருந்த போது பாடசாலை வேலைகளிலும் மாணவர் மன்றங்களிலும் நாடகங்களிலும் என ஒவ்வொன்றிலும் மிளிரக் கூடிய மாணவர்களாக இந்த ஒவ்வொருத்தரும் தலைநிமிர்ந்து நின்றபோது அவரை நோக்கியிருந்த ஏளனப் பார்வைகள் வெய்யோனைக் கண்ட பனித்துளிகள் போல ஓடி மறைந்தன.
பாடசாலையில் ஒட்டுண்ணியாக இருந்து தமது தேவை நிறைவூறும் மட்டும் ஆசிரியரை வருத்தி வருத்தி பயனை எடுத்துக் கொண்டு பிறகு கறிவேப்பிலை போல் துhக்கி வீசிவிடும் மாணவர்களுக்கு மட்டுமேயில்லாது சகலருக்கும் அவர் அங்கு பணியாற்றினார் என்பதற்கு விட்டு வந்த தடங்கள் தாம் இந்த மாணவர்கள்.
~~மக்களே... நீண்ட காலத்துக்குப் பொறகு சந்திக்கிறம்... வீட்ட அழைத்து ....
~~நாங்க ஒங்கள சந்திக்கத்தான் வந்தம் ஸேர்... நான் இப்ப ஒரு எக்கவூன்டனாக வேல பார்க்கிறன்... ஸேர நினைக்காத நாளில்ல... ஆனா வந்து சந்திக்கத்தான் வழீல்லாம பல வருடங்கள் கழிஞ்சிடுச்சி... இப்பிடியொரு நெலயிலதான் .... றமீஸின் கண்கள் பீறிட்டன.
~~ஸேர் அல்லாட அருளால நாங்க எல்லாரும் நல்ல நிலைமைகள்ல நிக்கிறம்... நீங்க செஞ்ச சேவைக்கு எங்களுக்கு கைமாத்தா ஒன்டும் செய்யேலா... என்டாலும் எங்களால ஏன்டிய ஒதவிகளச் செஞ்சிட்டுப் பொகவென்டுதான் வந்தீச்சிய... ஸேர் நீங்க பாதுகாப்பான எடமொன்ட காட்டினா காணிய எடுத்து வீடொன்ட அமச்சி...
~~ஏன்ட ஊர் இருக்கிற நெலயில நான் மட்டும் எப்பிடித் தப்பிப் பொகேலும் மகன்... நானும் அவங்களோடே இருந்திடனும்...
~~எங்களுக்கு ஸேரப் பத்தித் தெரியூம் ஸேர்... அதாலதான் ஊராக்களுக்கெண்டு வேறயா நாங்க சேத்தி வந்தீச்சியொம்... ஆனா எங்கட ஸேருக்கு நாங்களே நின்டு எங்கட கைகளால ஒரு ஊட்டக் கட்டித் தரவேணுமென்ட ஆசயோட வந்திருச்சியொம் ஸேர்... தயவூ செஞ்சி இத மட்டும் மறுக்க வேணாம்... றமீஸ் கெஞ்சிக் கூத்தாடினான்.
அந்தத் திறந்த வெளியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஜெமீல் மாஸ்டரின் பெருமையை றமீஸ் உணர்த்திக் கொண்டிருந்தான்.
எந்தத் துன்பங்களுக்கும் சளைக்காது முகம்கொடுத்துப் பழகிப்போன ஜெமீல் மாஸ்டரின் கண்களும் கரைபுரண்டோட குலுங்கிக் குலுங்கி கண்ணீர் வடித்தார்.
;;; மப்பும் மந்தாரமுமான வானம். காகங்கள் ஒன்றிரண்டாக அங்கொன்று இங்கொன்றாக நின்று கரைந்து கொண்டிருந்தன. அவற்றின் கோரஸ் ஒலி ஆத்திரமூட்டுவதாக இருந்தது. வழமையில் வந்து போகும் எந்த ஒரு சின்னக் குருவியினங்களையூம் அன்று கண்டுகொள்ளவே முடியவில்லை. வழமையில் வீட்டு மாமரத்தில் குந்தியிருந்து இனிய கீதமிசைக்கும் மாம்பழத்தியையோ காவி நிற உடலும் செம் மஞ்சள் நிற வாலும் கடுங் கருப்புத் தலையூம் கொண்ட வால் குருவியைத் தானும் அன்று காண முடியவில்லை. மரங்கள் வேறு ~கம் மென்று ஒரு ஆட்டம் அசைவூ இன்றி பிளாத்திக்கு மரங்கள் போல ... முழுச் சுழலுமே ஏதோ பயங்கரத்தை உணர்த்திவிடுவதான பிரமை.
வெறிச்சோடிக் கிடந்த வானத்தில் செழுமை முழுமையாக துhக்கி விடப்பட்டிருந்தது.
ஜெமீல் மாஸ்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதிகாலையில் சுபுஹு தொழுதுவிட்டு பள்ளியிலிருந்து வெளிப்பட்டால் கலந்தர் காக்காவின் கடையில் லெவரியாவூம் வண்டுவப்பையூம் தின்று ஒரு டீ யூம் குடித்துவிட்டு கடற்கரையோரமாக ஒரு துhரம் காலார நடந்து விட்டு வருவது அவரது வழக்கம்.
~~இன்டைக்கு வானம் இவ்ளோ மப்பா இருக்கே மாஸ்டர்... காதர் காக்கா அலுத்துக் கொண்டார்.
~~மெய்தான் காதர் காக்கா... காலமே கிளம்பி வார குளிர்த்தி இன்டைக்கு மனதுக்கு பிடிக்கல்ல... ஜெமீல் மாஸ்டரின் மனநிலையூம் மந்தமாகத்தான் இருந்தது.
நாற்பது வருட கால ஆசிரிய சேவையில் இருந்துவிட்டு ஓய்வூ பெற்றவர் ஜெமீல் மாஸ்டர். கடைசிக் காலநேரம் பள்ளியூம் தொழுகையூம் எழுத்தும் வாசிப்புமாக கரைகின்றது.
~ஸேர் என்று அவருக்கு வழி விட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் அவருக்கான தனியான மரியாதையை மனதிலிருத்திக் கொண்டவர்கள் தான்.
அன்று கடற்கரை மீது நாட்டம் கொள்ளாத ஜெமீல் மாஸ்டர் நேரே வீட்டை அடைந்து சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொண்டார்.
சற்றே கண்ணயரும் வேளையில் தான் அந்தக் கூக்குரல் அவரை உசுப்பி விட்டது.
~~கடல் வருது கடல் வருது... ஓடுங்கொ... ஓடுங்கொ...
அவருக்கு அது புதுவித ஓலமாகப் பட்டது. அறுபத்திரண்டு அகவைகளை எட்டிவிட்ட அவரால் இதுவரை கேட்டிராத ஒன்று... நின்று நிதானித்து தீர்மானம் எடுக்கக் கூடிய நேரம் அல்ல அது... உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஓடுவதைக் கண்டார்.
மனைவிஇ மக்கள் எல்லோரையூம் கூட்டிக் கொண்டு மேட்டுப் பக்கமாக ஓடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை.
முழு ஊரிலுமே எஞ்சியோர் அங்கு திரண்டிருந்தனர். பேயறைந்தவர்கள் போல் ஒவ்வொருவரும் பயத்தாலும் துக்கத்தாலும் மிரண்டு வெளுத்தப் போயிருந்தனர்...
அவர்கள் கண்முன்னே கடலின் ஆகோரக் காட்சி விரிந்தது. பின்தங்கிவிட்ட ஒவ்வொரு உயிரையூம் பந்தாடியது. உதவிக்கரம் நீட்ட முடியாத இக்கட்டில் ஒவ்வொருவரும் பரிதவித்தனர். தாயின் கையிலிருந்து உருவி எடுக்கப்பட்ட பிள்ளைகளின் கீச்சிடல் மனதைப் பிழிந்தது. ஒவ்வொருவரையூம் பறிகொடுத்த உள்ளங்கள் அழுது புரண்டன.
வீடு சொத்து செல்வம் எல்லாமே கடலுடன் கரைந்தது.
ஜெமீல் மாஸ்டரின் முத்த மகள் ஒரு ஆசிரியை. ஊரிலேயே மாப்பிள்ளையெடுத்து மாஸ்டரின் வளவிலேயே வீட்டை அமைத்துக் கொடுத்திருந்தார். இரண்டாவது மகளுக்கு இப்போதுதான் ஒரு வீட்டை அமைத்து முடித்து வரன் பாரத்துக் கொண்டிருந்தார். மற்றப் பெண்பிள்ளைகள் இருவரும் இரட்டையர். உயர்தரத்தில் கற்று வைத்தியராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாளெண்ணிக் கொண்டிருப்பவர்கள். இளையவன் மகன்.
ஜெமீல் மாஸ்டரது மட்டுமல்ல அனைவரதும் எதிர்பார்ப்புக்களை கரையச் செய்து சுனாமி என்ற பெயரில் அந்தக் கடற்கோள் அனாதரவாக்கி விட்டது.
வெறும் மணல்மேட்டில் கும்பல் கும்பலாக மக்கள் நிறைந்திருந்தனர். அநாதரவாக... நாதியற்று...
அன்றைய பொழுது விடிந்திருக்கவே கூடாது என்று எல்லோரும் போல் கூறிக் கொள்ளத்தான் செய்தனர். என்றாலும் முடங்கியிருந்துவிட முடியூமா...?
~அல்லாட நாட்டம் என்ற தோரணையில் ஜெமீல் மாஸ்டர் சுனாமிக்குள் அகப்பட்டுப் போன சனங்களை மீட்டெடுக்க ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். இந்தக் கஷ்டத்திலிருந்து மக்களை மீட்டெடுத்து உளரீதியாக கட்டியெழுப்பும் பணியில் மும்முரமாகிவிட்டார். எல்லாப் பக்கமிருந்தும் உதவிக்காக குழுகுழுவாக இளைஞர்கள் வந்திறங்குகின்றனர்.
~ஸேர்...
மாஸ்டர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு நிதானம் தட்டவில்லை. வளர்ந்த உடம்பு... கன்னத்தை அடைத்த தாடி... யாராக இருக்கும் என்ற தோரணையில் சிந்தனைய+டே நோக்கினார்...
சிரித்துக் கொண்டே ~~நீங்க... நீங்க... யார் மகன்...
~~நான் ஸேர்... பதுளையிலிருந்து வாரன்...
~~ஓ.. அப்படியா... மாஸ்டருக்கு தான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரிய நியமனம் பெற்று முதன் முதலாக காலடிவைத்த பாடசாலைதான் நினைவூ வந்தது. பத்து வருடங்கள் அங்கேயே சேவைசெய்தார்... இடையே சில தேவைகளின் நிமித்தம் பதுளைக்குச் சென்று வந்திருந்தாலும் இந்த உருவத்தை அவர் பார்த்திருக்கவில்லை.
~~ஸேர் ... நான் றமீஸ்... மாஸ்டரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இருக்காதா பின்னே... அன்று பத்து வயதில் சந்தித்தவன் இன்;று நாற்பது வயதில் தடாலடி வளர்ந்திருந்தான்.
கிறுக்கன்... சண்டியன் எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன். பாடசாலையில் என்றுமே அடிதடி... உதை குத்துதான்...
ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் அடி வாங்காத நாட்களேயில்லை. எல்லாச் சிக்கலிலும் அவனது பெயர் முடிச்சுப் போடப்பட்டு விகாரப்படுத்தப்பட்டு தண்டனையையூம் பெற்றுக் கொடுத்துவிடும்.
ஜெமீல் மாஸ்டர் அவனின் கூரிய கண்களை அவதானித்திருந்தார். அவனுள் புதைந்துபோன ஏக்கத்தை அவர் காணத் துடித்தார். அவனை நெருங்க நெருங்க அவன் விலகியே சென்றான். தன்னை அடிக்க துhற்ற இன்னுமொருவர் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்பதே அவனது எண்ணமாக இருந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மாஸ்டர் அவனில் கரிசனை காட்டுவதை படிப்படியாக வெளிப்படுத்தும் போது... அவனது கைகளில் பொறுப்புக்கள் விடப்படும் போது... ஜெமீல் மாஸ்டர் அவனது நெருங்கிய வழிகாட்டியாகி விட்டடிருந்தார்.
~~ஸேர் அன்டைக்கு இருந்த நிலையில தொடர்ந்திருந்திருந்தா நான் இன்டைக்கு பெரிய சண்டியனாகி இருந்திருப்பன்.. பெரிய ஸேர் ... ஸ்கூலால என்னய வெலக்கப் பார்த்த நேரம் வெலக்கியிருந்தா இன்டக்கு கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பன்...
மாஸ்டர் பிரின்ஸிபலிடம் கெஞ்சிக் கூத்தாடியது அன்றும் அவரது நினைவில் இருக்கத்தான் செய்தது.
~~நீங்க புதிசு மாஸ்டர்... இவங்களப் போலாக்கள திருத்தேலா... ஒரே வழி வெலக்கியூடுறதுதான்...
~~எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்க ஸேர்... என்னாலேண்டிய முயற்சிய நான் செய்றன்... அவன்ட உள்ளத்த அல்லா மாத்துவான்... அவன மட்டுமல்ல அவன்ட பெயருல அவன மாட்டி உடுறத்துக்காக இன்னம் செல புள்ளகள் செய்ற வேலகளேம் நான் கண்டு பிடிச்சிருக்கன் ஸேர்...
~~இதென்ன... புதுக்கத...
~~அதுதான் உண்ம ஸேர்... வேறு வழியின்றித்தான் அன்று அதிபர் அவனை விலக்காமல் ஜெமீல் ஸேரின் தலையில் கட்டினார்.
~~புதுத் தும்புக்கட்டு கொஞ்ச நாளக்கு நல்லாத் துhக்கும்தான்... கள்ளு முள்ளுகள்ல குத்திப்படச் செல்லக்கித்தான் நோவூ வெளங்கும்... சில ஆசிரியர்கள் அறிவூரையாகவூம் இன்னும் சிலர் குத்து வார்த்தை யாகவூம் இப்படிச் சொல்லத்தான் செய்தனர்.
ஆரம்பத்தில் மாஸ்டரைக் கூட றமீஸ் துச்சமாக மதித்துச் செயற்பட்ட போது இவனை அதிபர் உட்பட பலர் ஏளனப் பார்வை பார்த்தனர் தான். ஆனாலும்....
ஜெமீல் மாஸ்டரின் நம்பிக்கை வீண் பேகாவில்லை.
~~ஸேர் றமீஸட மேல்ல குத்தத்தப் பொட்டுட்டு எல்லா ஜராவ வேலகளயூம் செய்த எங்களயூம் பிரின்ஸிபல்ட்ட காட்டிக் குடுக்காம திருத்திட்டீங்க ஸேர்... றமீஸோடு கூட வந்திருந்தவர்கள் காலிதும் ஸாலிஹும் தான் என்றதை இப்போதுதான் மாஸ்டர் உணர்ந்தார்.
அவர் அங்கிருந்த போது பாடசாலை வேலைகளிலும் மாணவர் மன்றங்களிலும் நாடகங்களிலும் என ஒவ்வொன்றிலும் மிளிரக் கூடிய மாணவர்களாக இந்த ஒவ்வொருத்தரும் தலைநிமிர்ந்து நின்றபோது அவரை நோக்கியிருந்த ஏளனப் பார்வைகள் வெய்யோனைக் கண்ட பனித்துளிகள் போல ஓடி மறைந்தன.
பாடசாலையில் ஒட்டுண்ணியாக இருந்து தமது தேவை நிறைவூறும் மட்டும் ஆசிரியரை வருத்தி வருத்தி பயனை எடுத்துக் கொண்டு பிறகு கறிவேப்பிலை போல் துhக்கி வீசிவிடும் மாணவர்களுக்கு மட்டுமேயில்லாது சகலருக்கும் அவர் அங்கு பணியாற்றினார் என்பதற்கு விட்டு வந்த தடங்கள் தாம் இந்த மாணவர்கள்.
~~மக்களே... நீண்ட காலத்துக்குப் பொறகு சந்திக்கிறம்... வீட்ட அழைத்து ....
~~நாங்க ஒங்கள சந்திக்கத்தான் வந்தம் ஸேர்... நான் இப்ப ஒரு எக்கவூன்டனாக வேல பார்க்கிறன்... ஸேர நினைக்காத நாளில்ல... ஆனா வந்து சந்திக்கத்தான் வழீல்லாம பல வருடங்கள் கழிஞ்சிடுச்சி... இப்பிடியொரு நெலயிலதான் .... றமீஸின் கண்கள் பீறிட்டன.
~~ஸேர் அல்லாட அருளால நாங்க எல்லாரும் நல்ல நிலைமைகள்ல நிக்கிறம்... நீங்க செஞ்ச சேவைக்கு எங்களுக்கு கைமாத்தா ஒன்டும் செய்யேலா... என்டாலும் எங்களால ஏன்டிய ஒதவிகளச் செஞ்சிட்டுப் பொகவென்டுதான் வந்தீச்சிய... ஸேர் நீங்க பாதுகாப்பான எடமொன்ட காட்டினா காணிய எடுத்து வீடொன்ட அமச்சி...
~~ஏன்ட ஊர் இருக்கிற நெலயில நான் மட்டும் எப்பிடித் தப்பிப் பொகேலும் மகன்... நானும் அவங்களோடே இருந்திடனும்...
~~எங்களுக்கு ஸேரப் பத்தித் தெரியூம் ஸேர்... அதாலதான் ஊராக்களுக்கெண்டு வேறயா நாங்க சேத்தி வந்தீச்சியொம்... ஆனா எங்கட ஸேருக்கு நாங்களே நின்டு எங்கட கைகளால ஒரு ஊட்டக் கட்டித் தரவேணுமென்ட ஆசயோட வந்திருச்சியொம் ஸேர்... தயவூ செஞ்சி இத மட்டும் மறுக்க வேணாம்... றமீஸ் கெஞ்சிக் கூத்தாடினான்.
அந்தத் திறந்த வெளியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஜெமீல் மாஸ்டரின் பெருமையை றமீஸ் உணர்த்திக் கொண்டிருந்தான்.
எந்தத் துன்பங்களுக்கும் சளைக்காது முகம்கொடுத்துப் பழகிப்போன ஜெமீல் மாஸ்டரின் கண்களும் கரைபுரண்டோட குலுங்கிக் குலுங்கி கண்ணீர் வடித்தார்.
No comments:
Post a Comment