Wednesday, April 1, 2009

short story

பாலகன்

'இந்த மொற அஜ்ஜிக்குப் பொக நிய்யத்து வெச்சீச்சிய... ஏடகூடமாக அவன் முன்னே ஒலித்த சத்தத்தைக் கேட்டு கழுத்தை உயர்த்தி புருவங்களை நெறித்துப் பார்த்தான்.
'இந்த மொற அஜ்ஜிக்குப் பொக நிய்யத்து வெச்சீச்சிய... அல்லாத்தாலா நாயன்ட்ட துஆக் கேளுங்கொ... என்னால எனத்தச் செரி தவறுகள் பொல்லாப்புகள் நடந்தீந்தா மன்னிச்சிக் கொளுங்கொ... நடுச் சந்தியில் அவரை எதிர்கொண்டு நின்றார் குத்துhஸ் மொதலாளி.
மெதுவாகச் சிரிக்க முனைந்த உதடுகளும் மூடி நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தன. கண்கள் குறும்பாக நர்த்தனமாடின. தொடராக உதடுகள் விரிந்து பல்லுக் கூட்டம் தெரியூமாப் போல் சிர்ப்பு உயர்ந்தது. நாலுபேர் கவனத்துக்கு சிரிப்பு காட்டியம் கூறியது. நடுச்சந்தியில் ஆங்காங்கு குழுமமாகவூம் தனியாகவூம் இருந்த அனைவர் பார்வையூம் அவர்களை நோக்கித் திரும்பின. காசிமுக்கு காது நன்றாகவே கேட்கும் என்பது அங்குற்ற எல்லோர்க்கும் தெரியூம். தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருபவர். அப்படியிருக்க சத்தம் போட்டு பேசி மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவை ஏன் வந்தது. ? தெரிந்தவர்களுக்குத் தான் அந்தக் கதை தெரியூம்.
காசிமின் கடையில் கூலிக்கு வந்தமர்ந்தவர்தான் குத்துhஸ் நானா. காசிம் தனது வியாபாரத்தை தொடர்வதில் சில சிக்கல்களை எதிர் நோக்கினார். கூலிக்கு கடையைக் கொடுத்துவிட்டு தொழிலை மாற்றிக்கொள்ள முனைந்த போது குத்துhஸ் கடையை கேட்க அவருக்கு விட்டுக் கொடுத்தார். நம்பிக்கைக்காக எந்த எழுத்தும் எழுதாமலே கடை குத்துhஸ் வசமாகியது. சுமார் பத்து வருடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது வருடமாகியூம் விட்டது. காசிமுக்கும் கடையின் அருமை உரைக்கத் தொடங்கியிருந்தது. முன்னைய வீழ்ச்சிகளிலிருந்து எழும்பி சுமாராக ஓடிக்கொண்டிருந்தவர் பிள்ளைகளின் நலனை நோக்கும் நேரம் வந்து விட்டதால் கடையை மீளப் பெற்றுக் கொள்ள நினைத்தார்.
'ஆ.. குத்துhஸ் எப்பிடியன் வாசொ... கடையில் மூக்குமுட்ட வியாபாரம் செய்து கொண்டிருந்த குத்துhஸை அனுகினான் காசிம். 'என வாசன் காசிம் நானா.. தெரியவோ அப்பிடியிப்படி ரோலாக்கி பெரட்டிக்கொண்டு ஓடிய... குத்துhஸ் அப்பிடிச் சொன்னாலும் சொந்தக் கடையொன்றும் காணிபூமியூம் வாங்குமளவூக்க காசிமின் கடைதான் பரக்கத்தோடு கைதுhக்கி நின்றது என்றால் அது மிகையல்ல.
'ம்... புள்ள குட்டிகளும் பெருத்துட்ட ... இனிக் கடயச் செய்யோனுமென்டு ஐடியா எடுத்த குத்துhஸ்...
'ஆ... குத்துhஸின் வாய் இரண்டாகப் பிளந்து நின்றது.
'பாக்கோம்.. பாக்கோம்...
குத்துhஸ் எதைத்தான் ஷபாக்கொம் என்று சொல்கின்றானோ... காசிமுக்கு புரியாத புதிராக இருந்தது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வாடகைக் காசைக் கூட்டிக் கேட்ட போதெல்லாம் இதே பதில்தான் வந்தது. அந்த கடையை அண்டி நாளொன்றுக்கு ஆயிரத்தைத் தாண்டி வாடகைக் காசு அறவிடப்படும் நிலையில் மாதமொன்றுக்கு காசிம் வாங்கிக் கொண்டிருந்தது வெறும் பத்தாயிரம் மட்டுமே. அதனையூம் மிகவூம் கஸ்டப்பட்டு மீளமீளக் காலடிக்கு அலைந்துதான் பெற வேண்டியிருந்தது.
'குத்துhஸ் நான் கடயச் செய்யோணும். இதுக்கு முந்தி நாலஞ்சி தரத்துக்கு மேல்ல ஒங்கட காதுல அத போட்டு வெச்சீச்சிய... கடையை மிக அவசரமாக திருப்பிப் பெற்று பிள்ளைகளுக்கு யாவாரம் தொழில் பழக்க காசீம் தீர்மானித்திருந்தார்.
'எனா செல்லிய காசிம்... சும்ம வெளயூhடுறௌ... யாவார சாமானுகள்... தட்டுமுட்டுச் சாமான்கள் எவ்ளோவீக்கன்... அய் மட்டுமல்ல இந்தெடத்துக்குத்தான் எங்கட சாமனும் கஸ்டமர் மாரும் பழகீச்சிய... குத்துhஸின் பேச்சு மட்டுமல்ல பாவனiயூம் காரமாகத்தான் இருந்தது.
' சரி... சரி.. ஒங்களுக்கு எவ்ளோ காலம் வேணுமன்... காசிம் இறுதியாகக் கேட்டு வைத்தார்.
'அப்பிடிச் செல்லேலுமொ காசிம் நானா... இப்பெய்க்கு நாங்க ஒழும்புறத்தப் பத்தி பேசாதங்கொ... இப்ப ஒங்களுக்கு எவளவூ வேணுமென்டு செல்லுங்கொ... கடைட பேச்ச முடிச்சிக்கொளோம்... காசீம் அந்தும் குந்துமாகிப் போனார்.
'ஓ... இம்மட்டு சொணக்கமும் கடய வெளாடிக் கொளத்தானோ... காசிமுக்கு பொத்துக் கொண்டு வந்தது. அம்மட்டுக் காலமும் தனக்குக் கீழ் சேவகம் புரிந்தவனென்ற பச்சாதாபத்தில் விட்டு வைத்தது எவ்வளவூ பெரிய தப்பு என்பதை மனசார உணரத் தொடங்கி விட்டார்.
'இந்தாங்கொ இதுல பத்திரிச்சிய... கடய ஏன்ட பேருக்குத் திருப்புங்கொ.. ஒருநாள் குத்துhஸ் இப்படிச் சொன்னான்.
'குத்துhஸ் எனத்தியன் பேசிய.. எனக்கு விச்சத் தேவீந்தா அப்பவே முப்பது நாப்பதுக்கு வித்தீப்பன்... இப்பைக்கு அறுபது எழுபது பொறும்... எப்பிடீம் நான் விச்சீல்ல... இவளவூ காலமும் ஸபூர் பண்ணினது போதும் இன்டக்கு நாளக்கே எழும்புங்கொ... காசீம் ஆத்திரம் மேலிட சொன்னான்.
'இந்தா காசீம்.. இப்ப பன்னென்டு வருசமாகீட்ட... புத்திய எனக்குத்தான் ஈச்சிய... மிச்சம் மிச்சம் பேசினா ஒன்டுமில்லாப் பெய்த்துடும்... குத்துhஸின் கணைகள் பாயத்தொடங்கின.
'எட குத்துhஸ் அல்லா றஸூல் பொறுக்கிய பேச்சொடா பேசிய... காசீமால் அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நம்பி ஏமாந்து விட்டதை உணரும் போது ஆத்திரம் மேலிட்டது. திரும்பத் திரும்ப இதே பதில்தான் கிடைத்து வந்தது. குத்துhஸின் பின்னால் நிற்கும் காவாலிகள் கூட்டம் வேறு. தங்கம் வெள்ளி யாவாரத்திலும் ஈரோட்டு யாவாரத்திலும் கால் பதித்த குத்துhஸ் இப்போது பகிரங்கமாகவே கறுப்பிச்சி கறுப்பிச்சி எடுத்து வரும் எல்லா சாமான்களையூம் குத்துhஸே எடுத்துக் கொளவூம் செய்தான். யாவாரம் தொழிலுகளுக்கு ஐந்து பத்தென்று வீசி சண்டிக் குழுவொன்றை பிடித்தும் வைத்திருத்தான். பொலிஸ் கேஸ் என்னதான் வந்தாலும் ஆளைத் தப்ப வைக்கும் பொறுப்பையூம் எடுத்துக்கொண்டிருந்தான். இவர்களின் உருக்குதல்களும் இடையிடையே காசிமை நோக்கி வரத் தொடங்கியிருந்தது. காசிம் எவ்வளவோமுயற்சித்துப் பார்த்துவிட்டார்;;;;;;;;;;;;;;;. 'போதுமான - ஆகுமான மனிசர் என்ட எல்லோரையூம் போட்டு பேசிப் பார்த்தார். நடந்தது ஒன்றுமில்லை. மாறாக துhது சென்றவர்கள் அவரின் துhதுவராகவே வரத் தொடங்கினர். மட்டுமல்ல ஷதாரத்த எடுத்துக்கொண்டு குடுக்கியதுதான் புத்தி என்று சொல்லாமல் சொன்னனர். குத்துhஸின் சாப்பாட்டை தின்றவர் யாவரும் அவருக்கு தலைவணங்கி நிற்கவேண்டிய தேவையூடைய வர்களாயிற்றே... புள்ளகள இட்டுண்டாக்கிக் கொள தொழில் பழக்கப் பார்த்தவரின் கதை இப்படியாயிற்று. தற்போது புள்ளகளும் தாரெவரதோ கடைகளில் கூலிகளாக...
இன்றைக்கு பத்துப்பதினொரு வரு~ங்களாகியூம் விட்டது.
ரு கல்லில் நான்கைந்து மாங்காய் பறிக்கும் பேர்வழி குத்துhஸ் கலவர சந்தர்ப்பத்தில் ஒன்றொன்றாக வந்த தங்கக் குவியல்கள் குத்துhஸை இந்த உயரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இவருக்கென துதிமாலை பாடும் ஒரு குழுவூம் இருக்கவே செய்தது. அவரில்லாமல் ஊரில் எந்த விடயமும் நடந்துவிடக் கூடாது என்ற அக்கரை அவர்களுக்கு. அவருக்கொன்றென்றால் ஒரு நுhறு பேர் கத்தி பொல்லுகளுடன் வரத் தயார். மொத்தத்தில் ஒருவித மேதாவித்தனத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்.
'அஜ்ஜிக்குப் பொகப் போறாம் அஜ்ஜிக்கு... காசீம் உள்ளத்தளவில் கண்ணீர் வடித்தார். 'எனா காசீம் நானா... குத்துhஸூ ஹாஜியாராகப் பொறாமொ.. அவனுக்கு ஹாஜி மீட்டராகத்தான் ஏலும்... மத்த மனிசரட அநந்திரத்த புழுங்கிக் கொண்டுட்டு இப்ப பாவம் கழிச்சப் பொகவாயீச்சும்... மம்மிருபான் சொன்னது நாலு பேருக்கும் கேட்கத்தான் செய்தது. ஷஷஎத்துணப் பேரட ஒஜீபணத்த தட்டிப் பறிச்சவணன். அவன்ட தம்பி தங்கச்சிமாரே தின்னுறத்துக்கொரு ஒஜீபணம் இல்லாம தடமாறிய.. சூத்துப் பெருத்த முதுகுப் பசியாக்களுக்கு புரியாணி தின்னக் குடுக்கச் செல்லேக்கி ஒரு பொகுத்துத் தங்கச்சிக்கு எந்த அழைப்பும் இல்ல... மம்மிருபான் ஆத்தீரம் தீரு மட்டும் கத்தினான்.
உண்மைதான் காசீம் மட்டுமா... இன்னும் எத்தனையோ பேர் அடுத்தடுத்து லிஸ்டில் இருக்கவே செய்தனர். ஷஷஎனாடா அந்த அத்துக் குத்துhஸூ அஜ்ஜிக்குப் பொகப் போறாமொ... அம்புடட்டே அந்த நஸரானிட்ட நாலு கேள்வி கேட்கந் தனைம் ஏன்ட நாக்குத் துடிச்சிய... காசிமின் உம்மா அந்தத் தள்ளாடும் வயதிலும் உரிமைக்காக விண்ணப்பம் செய்து கொண்டே இருந்தார்... வீட்டிலும் காசீமால் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை. காசிமுக்கு அந்தக் கடை வாப்பாவிடமிருந்து கிடைத்த ஒரே முதுசொம். இன்றிருந்தால் அது ஒரு கோடி பொறும்... ஷஷசெய்ததெல்லம் செஞ்சுட்டு பொல்லாப்பு நடந்தீந்தாலா... மனிசரால் எப்படியூம் நடக்கமுடியூம் என்பதற்கு அத்துக் குத்துhஸூ நல்ல உதாரணம் என நினைத்துக்கொண்டான். இ~hத் தொழுகைக்குச் சென்ற காசிமுக்கு உள்ளம் தொழுகையில் லயிக்கவில்லை. தொழுகையின் பின்னான விN~ட பயானிலும் கூட லயிக்கவில்லை. ஷஷபுனிதமான மாசத்தில புனிதமான கடம ஹஜ்ஜி... இல்லாட ஆலயத்தஇ நபியவங்கட காலடிபட்ட புனித மண்ண காணப் போக எல்லாருக்கும் நஸீபாகீல்ல... அல்லாத்தாலா நாயன் பரக்கத்துச் செஞ்ச செல நல்ல மனிசருக்குத்தான் அந்தப் பார்க்கியம் கெடச்சிய... எங்களொங்களுகளுக்கும் இந்தப் பாக்கியத்த அல்லா நஸீபாக்கோணும்... அஜ்ஜிப் பாக்கியம் கெடச்சவங்க அல்லாவெடத்தில பெரிய பாக்கியம் செஞ்சவங்க... அவங்க நாளைப் பின்னக்கு அன்று பொறந்த பாலகனப் போல வரப் போறாங்க... அவங்கட எந்தப் பாவத்தயூம் அல்லா மிச்சம் வெச்ச மாட்டான்... எல்லம் கழுவியூட்டுடுவான்... அதனால அவங்க எங்கள்ட்ட பாவ மன்னிப்பக் கேட்ட நாங்க மன்னிச்சுடோணும்... காசிமுக்கு பொறுக்கவில்லை. மஜ்லிசிலிருந்து எழும்பியே விட்டார்... அதற்கு மேலும் எப்படித்தான் இருக்க முடியூம். ஷஷஇந்த மொய்லவி எல்லாரையூம் பாலகனாக்கப் போற... அத்துக் குத்துhஸ்ஸட வாலெனா... அஜ்ஜூக் காலத்துல மட்டும்தான் ஊர் ஊரா சுத்தி வார... எப்பிடிச்சரி ஒரு பத்துப் பேர புடிச்சி குரூப்புக்கு குடுத்துட்டு அவரும் அஜ்ஜிக்குப் போற... இனியிவரு எப்பிடியன் தௌபாச் செய்த மய்ரிய மக்களுக்கு எடுத்துச் செல்லிய... ஷஷஓ மச்சான்... மனிசருக்கு செஞ்ச குத்தத்த குறிப்பிட்ட மனிசரு மன்னிச்சங்காணைம் அல்லா மன்னிச்சியல்ல... பள்ளி முன்றலில் கூடியிருந்த இளசுகளின் விமர்சனப் பார்வை அது. காசிமுக்கு வெள்ளணையிலீந்து குழப்பமாக இருந்த சூழ்நிலை தீர்ந்து விட்டிருந்தது. ஷஷஎனா காசீம்... இன்டக்கு தாரெவரு அஜ்ஜிக்கு பொகோணுமென்ட விவஸ்தயே இல்லாப் பெய்த்துட்ட... எல்லம் பொறசித்தத்துக்குத்தான்... அன்னங்க தெல்காவத்த கணிய ஒனேத் தெரீம்... ஊட்டுப் பொறத்தால பொடக்கல்லேல ஈந்த காணி... பன்னென்டு பேர்ச்சஸ் காணீல இப்பைக்கு ஆறேழு பேர்ச்சஸ்தான் மிச்சம்... ஒவ்வொரு நாளும் வேலி நடக்கியென்டு கேள்வி... இதுகளச் செல்லப் போனா இனி பீஸப+ருதான் மம்ம இப்றாகீம் இயலாமையில் தோயூம்போதுஇ காசீம் காக்காவூம் செய்வதறியாது நின்றார். இயலாமையால் அடக்கி.. வாயைக் கையை அடக்குவதே குத்துhஸின் வழிமுறையாக இருந்து வந்தது. இதற்காகவென்றே வர்ச்சஸ் கேஸ்களில் பொலிஸில் மாட்டிப் படுபவரை விடுதலை செய்து கொண்டே இருந்தார். அந்தளவூக்கு பொலிஸிலும் அவருக்கு செல்வாக்கு வளர்ந்திருந்தது. இனிக் கேட்கவா வேண்டும்... இதேவேளை குத்துhஸின் வீடுஇ ஸலாம் சொல்ல வருபவர்களால் நிறைந்திருந்தது. இப்போதே பாலகனாகிவிட்ட நினைப்பில் மிதந்தார் காசீம். வீட்டில் தடல் புடலான ஏற்பாடு. அணிஅணியாக வருபவர்களுக்கு பலவித ஏற்பாடுகள்... ஹாஜிமாரின் துஆ பரக்கத்தைப் பெறுவதில் எல்லா மக்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது. இப்போதே பாலகனாகிவிட்ட நினைப்பில் நெஞ்சை இடித்து இடித்து கட்டிப்பிடித்து செய்து முஸாபஹாவூம் முஆனகாவூம் செய்து கொண்டீருந்தார்; குத்துhஸூ. ஒருவர் போக ஒருவர் என ஸலாம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸயீது மாஸ்டரும் ராசிக் கிராம சேவகரும் ஸலாம் கொடுத்து முடிந்து ஒருவாறாக வெளியேறினர்.
ஷஷவராமல் ஏலாவென்டத்துக்காக வந்தத்துக் கெனேன் மாஸ்டர் இவரோட ஸலாம் செல்லியது அவர்ட ஜராவகள எங்கட மேல்ல ப+சிக்கொணு வாரத்துக்குச் சமம் பெய்யோ நான் செல்லியது...
ஷஷஇல்லாட்டி இல்லாட்டி... இங்கயே சுத்தமில்லாமப் போனா பெய்ட்டு வரச்செல்லக்கி இஞ்சம் நாலஞ்சி படி சைத்தான் கொணம் கூடித்தான் வரப்போற... அன்ன பாருங்கொ அந்த மொம்ம ரசீது ஹாஜியார் எவ்ளோ பஸீந்தா குடும்பத்துக்கும் கெழவழிகளுக்கும் தேவையானதெல்லம் முடிச்சிட்டு பெய்ட்டு வந்தன்... இப்ப எவ்ளோ பஸிந்தா அமல் இபாதத்துகளோட இருச்சியாரு...
''ஓ... மெய்தான் அவருக்கு இரிச்சிய சொத்து பத்துக்கு ஒவ்வொரு மொறயூம் பொகேலும்... ஆனா ஒவ்வொரு மொறயூம் ஏழ எளியதுகள்ட ஊட்டு வி~யம்இ கடன் கொழப்பமுகள்இ யாவார ஒதவிகள்இகொமரு காரியங்க என்டு எத்துன செய்தாரு... அவங்க தான் ஒருநாளக்காலும் ஹாஜிமாரு... இரண்டு பேரும் பள்ளிக்குக் கரையேறி ஒருமுறை ஸூன்னத்துத் தொழுதுகொண்டனர். தீமைக்குத் துணை போவதும் தீமையே செய்து திருந்த மனமில்லாதவனோடு ஸலாம் சொல்லிக் கொள்வதும் ஒன்றென நினைத்துக் கொண்டனர் போலும்.

No comments:

Post a Comment