Wednesday, April 1, 2009

muhangal

முகங்கள்

மஃரிபு முடிந்த கையூடன் ஸூன்னத்து இரண்டு ரக்காத்துக்களையூம் தொழுது கொண்டான். இன்று மஹல்லா நாள்... எது தவறினாலும் அவன் மஹல்லா நாளை தவற விடுவதில்லை... ரெண்டாம் மஹல்லாக்கு ஒழுங்காகப் போய் வருவான். மாதம் ஒரு தடவை மூன்றாம் வாரத்தில் மூன்று நாளும் போய் வந்து விடுவான். ஒரு அசில் தாயீயாக செயற்படுவதில் அவனுக்கு அவ்வள ஆர்வம். வக்துக்கு தொழுது கொள்வது... வீட்டுத் தஃலீம்... ஜூம்யேராத் எதுவூம் தவறவிடப்படுவதுமில்லை... ஸூறத்தும் அவனில் களை கொண்டிருந்தது. அவனது பயணத்திற்கு எதுவூம் தடையாக அமைந்ததில்லை. எதனையூம் தடையாக அமையவிட்டதுமில்லை. அவ்வளவூ பிடிப்பும் அவனிடம் இருந்தது.

ஆரம்ப காலத்திலிருந்தே தொழுகையிலும் பள்ளியிலும் ஈடுபாடு அதிகம் அவனுக்கு. மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது ஆன்மிகப் பசியை போக்கிக் கொண்டான். ஒருநிமிடத்தை வீணாக்கவூம் அவன் தயாராயில்லை... அல்லாஹ் பற்றிய சிந்தனையூம் றஸூல் மீதான அன்பும் அவனை பிணைத்திருந்தது.

' ஏத்தியன் மகன் வாய ஒரே முணுமுணுத்துக் கொண்டு...

உம்மா அந்த ஆரம்ப காலங்களில் கேட்டிருக்கிறார்.
'மறுமைல எங்களுக்கிருக்கிற ஒரே பொக்கி~ம் நன்ம தான் உம்மா... திக்ருகள் தான் எங்கட தரஜாக்கள உயர்ரத்தப் போற...

உம்மாவின் வினாவூக்கு அச்சொட்டாகப் பதில் சொல்லிவிடுவான். '

நெசம்தான் மகன்... ஒங்கட இபாபத்துக்கள பாக்கச் செல்லக்கி ஏன்ட மனம் செரியா சந்தோ~ப்படுகிய...

உம்மாhவின் பூரிப்பு. பெரிய தாடியூம் அவனது ஒழுக்கமான நடத்தையூம் அவனுக்கு ஸீனத்தாக மாறியிருந்தது.

'இந்தா இவன் போற போக்கப் பாத்தா அது இவன்ட தலக்கடிச்சீடும் போலீக்கி... அன்னந்த ஜவாஹிர் மாஸ்டர்ட மகனுக்கு ஒரம் கரமாகவே பட்டு தல கொழம்பிப் பெய்த்து... இப்பவே மட்டுப்படுத்திக்கோ...

அவனது மாமா உம்மாவிடம் அடிக்கடி சொல்லத் தொடங்கியிருந்தார்.

'இங்க தலக்கடிச்சியத்துக்கொ... தலயசடாகவோ ஒன்டுமில்ல... எல்லாத்துலயூம் ஒரு நிதானம்... நடுநாயம் இருந்தா அப்பிடியாகீல்ல... செலசெலபேரு ஆகிறம் துனியாவப் பத்திய தௌpவில்லாம நடக்கப் போறதாலதான் இந்த ஜாய்கள் நடக்கிய...

அவன் தனது நிதானத்தை வெளிக் காட்டிக் கொண்டான். அவனது விளக்கத்திலும் செயலிலும் ஒரு நிதானம் இருக்கவே செய்தது. ஏ.எல்லை தாண்டிவந்த அவனுக்கு இலகுவில் ஒரு தொழில் எசவாகிவிடவில்லை.

வீட்டு முன்னால் இருந்த ஒரு டெயிலர் சொப்பில் சும்மா நேரங்களில் குந்தியிருந்த தைத்துப் பழகியிருந்தான். எல்லாவற்றிலும் இருக்கும் நுணுக்கம் அவனுக்கு இங்கும் கைகொடுத்தது. ஆரம்பத்தில் டெயிலரிங் செய்யத் தொடங்கினான். அதேவேளை ஆசிரியராவதற்கு அவனுக்கிருந்த எதிர்பார்ப்பைக் கைவிடவூமில்லை. அல்லாஹ் உரிய உரிய நேரத்தில் எல்லாவற்றையூம் தருவான் என்ற நம்பிக்கை எப்போதும் அவனுள் ஒளிரும்.

'அல்லாஹூம்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்பஉ தல் ஜத்த மின்கல் ஜத் - அல்லாஹ்வே நீ தர நாடியதை தடுப்பார் எவருமிலர். நீ தடுக்க நாடியதை தரவல்லார் எவருமில்லை. வெற்றியாவூம் உன்பாக்கமிருந்தே வரும்.

என்று அடிக்கடி ஓதிக்கொள்வான். அவ்வசனங்கள் அவனது உள்ளத்தை புடம்போட்டு எடுத்தது. புதிய விடயங்களைக் கற்பதில் ஆர்வம் அவனுக்கு. தேடித் தேடிக் கற்பான். அவனுக்கு அவனது அந்த பழைய நாட்கள் நினைவில் எழும். நினைக்கும் போதே புல்லரிக்கும். அட்டாளைச்சேனையில் பிறந்து வளர்ந்த அவனுக்கு இயல்பாகவே வாப்பாவின் குணங்கள் ஒட்டிக் கொண்டதில் வியப்பேது.

துடிப்புஇ வேகம்இ துணிவூ எப்போதும் விடாப்பிடியாய் அவளில் ஒட்டிக் கொண்டன. நல்லாதகப் பட்டது எதையூம் சொல்லாமல் விட அவனது மனம் இடம் தராது. அவனது வாப்பாவூம் அப்படித்தான். மட்டுமல்ல தமபிமாரும் அதே வரிசையில் தான் சேர்ந்திருந்தனர். உண்மைக்காகவே துணிந்து நிற்கும் வேகம் தவறல்லவே என்பது அவனது வாதம்.

'ஏ.எல் படிப்புக்காக நிந்தவூ+ரில் அவன் தங்கியிருந்த போது அவனத கூட்டாளிகள் சிலர் அப்போதைய சிறு அமைப்பொன்றுடன் ஒட்டியிருந்தனர். இவனாலும் விடுபட முடியவில்லை. ஏதோ ஒருஐ வேகத்தில் சேர்ந்தான். ஆனால் அந்த விளையாட்டே வினையான போது 'ஏ.எல் பரீட்சை அம்பேல் ஆனது. வளர்ந்து விட்ட மற்றொரு ஆளணிக் கூட்டம் இந்தச் சின்ன அமைப்பை தேடித் தேடி அழிக்கத் தொடங்கியது. பரீட்சை மண்டபத்திலிருந்து அன்று ஓடின ஓட்டம் கொழும்பில் ஒரு பெட்டிக் கடையில் தான் முடிந்தது..

எந்த இலக்குமினறி நான்கடி காம்பராவிற்குள் சுருண்டிருந்தான். தனிமையூம் வெறுமையூம் அவனை வாட்டி எடுத்தமது. கொஞ்சம் கொஞ்சமாக கொழும்பு அவனுக்குப் பிடித்துக் கொண்டது. படிப்படியாக புதிய நண்பர்கள்... தையலில் காட்டிய திறமையால் அவனில் ஈர்க்கப்பட்டவர்கள்.... புது வாழ்வூ இனித்தது. ஒரு பேனா நட்பு அவனில் சொல்லொனா மாற்றத்தைத் தோற்றுவித்துவிட்டது. புதிதாக பலதை சிந்திக்கத் தொடங்கினான். பேனா நட்பின் உறவில் கிடைத்த ஊரில் அவனது ஒன்றுவிட்ட சொந்த மாமாவை சந்திக்கக் கிடைத்தது மற்றொரு மாற்றத்தை அவனளவில் வேரூன்றியது. இன்றைய இறுக்கமான ஆன்மீகப் போக்குக்கு அவர்தான் விதையூ+ன்றினார். பேனா நட்புக் குடும்பத்திலேயே பெண்ணும் எடுத்தான்.

அவனது புகுந்த வீட்டு மாமா ஒரு வாசிப்புப் பிரியர். அவனும் விடாது வாசித்தான். கொஞ்சமல்ல அனைத்தையூமாக வாசித்தான்.

'கண்ட நின்டதெயெல்லம் வாசிச்சப்படாது... வழிகெட்டுப் போரொன்டும்...

அவனது வாசிப்பைக் கண்ட ஒரு சிலர் இப்படிக் கதைக்கவூம்தான் செய்தனர்.

'குர்ஆன் ஆலிமுலமாக்களட வெ~யம்... அத பாமர மக்களான நாங்க அத வாசிச்சப் போனா வழிகெட்டுப் போரொண்டும்...பழைய ரிடயர்ட் மாஸ்டர் இப்படிச் சொன்னபோது அவனது மூக்குநுனி சிவக்கத்ததான் செய்தது.

'வழிகாட்;ட வந்த வேதம்... முதல் வசனத்திலேயே வாசிக்கச் சொன்ன வேதம்... எப்பிடி வழிகெடுக்கும்...

அவனது நாவூ துடித்தது. என்றாலும் மெலிதாக அடக்கிக் கொண்டான். இல்லையேல் அவனது கொந்த ஊரில் அவனது வாப்பாவூக்கு அட்ட பெயர் அவனுக்கும் தான் வந்துவிடுமே. அப்போதெல்லாம் அங்கு தஜ்வீது குர்ஆன்கள் இல்லை. எவன் ஒன்றை எடுத்து வந்திருந்தான். அன்று அவனது மனைவி வீட்டுக்கு வந்திருந்த ஊரின் பிரபல ஷபிரசங்கப் பை யிடம் அதனை எடுத்துக் காட்டினான்.

'அப்பொவ்... இது யஹூதி நஸரானியள்ட குர்ஆன்... இத வாசிச்சால் வழிகெட்டுப் பெய்த்துடும்...

அவர் தீயை மிதித்தவர் போல துடிதுடித்தார். இவனுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. தான் அறியாத ஒன்றை தெரியாது என்று கூறிவிடாமல் கம்மளைக் குழப்பிப்போடும் இப்படியானவல்களைத்தான் சமூகம் தலையில் துhக்கிக்க கொண்டாடுகின்றது என்ற உய்மையை விளங்கும்போது சிரிக்காமலிருக்க முடியவில்லை.

ஊருக்கு மத்ரஸா வந்து தஜ்வீது முறை பிரபலமான போது அந்தப் பிரபல பிரசங்கி அவனகை; கண்ட மாத்திரத்தில் ஓடி ஒளிந்துகொள்வதை அவன் நேரடியாகவே கண்டுகொண்டான். யதார்ரத்த நிலை கருத்து நிலைப்பட.டட பத்திரிகைகைள் சினிமாக்கள்ள் கக்களுடைளிடையே தோல்வியடைந்து பால் சார்ந்த மசாலாக்களை படமாக்கும் சினிமாக்களும் கொச்சை பச்சையாக மேழும்பி நிற்பது போல்... கதைகளை ஒருட்டி புரட்டி பாசாய்கு செய்யூம் வசீர் ஸாஹப் போனடறவரடகளட சமூகத்தின் உச்சாணிக் கொப்பகளில் வீற்றிறருப்பர்...

இப்படியிருந்த போதுதான் அவனுக்கு ஸஹீஹூல் புகாரியின் தமிழ் மொழியாக்கம் கிடைத்தது. ஆர்வத்துடன் வாசித்தான். பள்ளியில் வைத்திருந்த அதனை வாசித்துக் கொண்டிருந்த போது வசீர் ஸாஹிப் அதனைப் பார்த்து விட்டார். அப்போது அவன் வக்தில் இருந்தான். ஒழுங்குறையான செயற்பாடுகள் முடிந்து போனபின் கிடைக்கும் ஓய்வூ நேரங்களில் அதனை வாசித்துக் கொள்வதனால் மேலதிக அறிவைப் பெற்றுக் கொள்வதுதான் அவனது தேவையாயிருந்தது.

'அப்போவ்... இதுகளப் பாத்து வழிகெட்டுப் பொகவா பாக்கிய...

வசீர் தலையில் அடித்துக் கொண்டார்.

'நபியவங்கட ஹதீஸப் பாத்தா பெ;பிடியன் வழிகெட்டுப் போற... பொறுக்க முடியாத பட்சத்தில் அவன் கேட்டு வைத்தான்.

'அது அப்பிடித்தான்... அதெல்லம் நாங்க செல்லிய கிதாபுகள மட்டும் பாத்தாப் போதும்... வசீர் ஸாஹிப் அடித்துச் சொன்னார்.

அன்றைக்குப் பிறகு அவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பது மாதிரி உள்ளுணர்வூ உந்தியது. அடிக்கடி ஸலாம் சொல்லிக் கொள்ளும் முகங்களும் கண்டும் காணாதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதை கண்ணாரக் கண்டான். இவர்களுக்கெல்லாம் என்ன நடந்துவிட்டதோ என வோசிக்கும் போது வசீர் ஸாஹிப் போன்றௌரின் இளக்டகாரமான சிரிப்பு அவனை என்னவோ செய்தது. ரெண்டு மூன்று வரு~மாக பெரிய வக்துக்கள் போகக் கிடைக்காத போது இந்தப் பார்வைகள் பலமாக வித்தியாசப்பட்டு நின்றதை அவன் காணத்தான் செய்தான். அன்று பள்ளியில் இ~hவூக்குப் பின் அவனது பொஸ் வக்துக்குப் பெயர் பதிந்து கொண்டார். அவனும் பெரிதான ஒரு வக்துக்கு பேர் பதிந்து கொண்டதோடு ஆசையோடு எதிர்பார்த்திருந்தான். புடைவைக் கடையூடன் இணைந்ததாக இருந்த டெயிலர் n~hப்தான் அவனத தொழிலகம். பொறுப்பெடுத்திருந்த ஷஓடர் எல்லாவற்றையூம் முடித்துவிட்டான்.

'ஹாஜி மூணாம் வாரத்துல வக்துல பொகோணும்... அவன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

'வக்துலயா.... அவரது வினாவில் எள்ளல் துhக்கலாகி நின்றது.

'என வக்தன்... இங்கிருச்சிய வேல வெடடிகள பாத்துச் செய்ங்கொ... சிதிதர கிட்டவாகிய... இத்தனைக்கும் ஊரின் தலைமைப் பொறுப்பில் இருந்து வக்தில் ஆட்களை ஆர்வத்தோடு சேரச் செய்து கொண்டிருப்பவர். ஒரு மஹல்லா நாளில் அவனத பெயரை பதிந்து கொண்டவரும் அவரே தான்.

'இல்ல ஹாஜி... இப்ப தான் பெய்த்துக் கொளக் கூடிய சூழ்நில கிட்டீச்சிய... அதாலதான் ஏன்ட பேரையூம் பதிஞ்சு வெச்ச... 'பேச வேணாம்... பெய்த்து வேலயப் பாருங்கொ... பொஸ் துள்ளிக் குதித்தார்.

மீண்டும் கேட்டபோது இனம் புரியாத கோபத்துடன் பாய்ந்தார். அவருக்கு ஏதொ ஷஜோஸ்ஸான நிலை...

அடக்கி அடக்கிக் கொண்டிருந்த ஷஜெதுபு பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு. நஸீர் ஸாஹிப் முன்னே பாய்ந்து பிடித்துக்கொண்டார்.

'ஓ... எத்ததனை முகங்கள் இவர்களுக்கு... அவனது உள்ளம் அலறியது.

இன்னும் அந்த ஆசை நிறைவேற்றப்படாமலேயே....

No comments:

Post a Comment